• Jul 03 2026

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கி கணக்குகளில்!

Chithra / Jul 3rd 2026, 9:44 am
image


அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ்,   ஜூன் மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் எழுபது வயதுக்கு மேற்பட்ட ஆறு இலட்சத்து இருபத்தி ஒரு ஆயிரத்து எழுநூற்று அறுபத்து ஒரு (621,761) முதியோர்களுக்கு மொத்தமாக,

முன்னூற்று பத்து கோடியே எண்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் (3,108,805,000.00) அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.


மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 76,139 முதியோர்களுக்கு முப்பத்தி எட்டு கோடியே ஆறு இலட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரம் ரூபாய் (380,695,000.00) அவர்களுக்கான அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதன் மூலம் தகுதியுடைய பயனாளர்கள், இன்று முதல் தங்களது வங்கிக் கணக்குகள் ஊடாக குறித்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கி கணக்குகளில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ்,   ஜூன் மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் எழுபது வயதுக்கு மேற்பட்ட ஆறு இலட்சத்து இருபத்தி ஒரு ஆயிரத்து எழுநூற்று அறுபத்து ஒரு (621,761) முதியோர்களுக்கு மொத்தமாக,முன்னூற்று பத்து கோடியே எண்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் (3,108,805,000.00) அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 76,139 முதியோர்களுக்கு முப்பத்தி எட்டு கோடியே ஆறு இலட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரம் ரூபாய் (380,695,000.00) அவர்களுக்கான அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன் மூலம் தகுதியுடைய பயனாளர்கள், இன்று முதல் தங்களது வங்கிக் கணக்குகள் ஊடாக குறித்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement