இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அடெல் இப்ராஹீம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை அலரிமாளிகையில் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
பொருளாதாரம் & முதலீடு: இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளைப் புதிய இலக்குகளுடன் மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
சிவில் விமானப் போக்குவரத்து: வான்வழிப் போக்குவரத்துத் துறையில் பரஸ்பர கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.
இலங்கை-எகிப்து நட்புறவை வளர்ப்பதில் தூதுவர் அடெல் இப்ராஹீம் ஆற்றி வரும் அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பைப் பிரதமர் பாராட்டி வரவேற்றார்.
இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டலுவல்கள், சுற்றுலா அமைச்சின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
எகிப்து தூதுவருக்குப் பிரதமர் பாராட்டு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கம் இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அடெல் இப்ராஹீம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை அலரிமாளிகையில் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.பொருளாதாரம் & முதலீடு: இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளைப் புதிய இலக்குகளுடன் மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.சிவில் விமானப் போக்குவரத்து: வான்வழிப் போக்குவரத்துத் துறையில் பரஸ்பர கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.இலங்கை-எகிப்து நட்புறவை வளர்ப்பதில் தூதுவர் அடெல் இப்ராஹீம் ஆற்றி வரும் அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பைப் பிரதமர் பாராட்டி வரவேற்றார்.இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டலுவல்கள், சுற்றுலா அமைச்சின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.