கிண்ணியா - முனைச்சேனை பாலப் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதியில் ஏற்பட்ட பாரிய குழியில் வீழ்ந்ததன் காரணமாக முச்சக்கர வண்டி ஒன்று நேற்று இரவு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாகச் சேதமடைந்தபோதிலும், அதன் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
கனமழையின் காரணமாகப் பெருக்கெடுத்த வெள்ளம் வடியாத நிலையில், முறைச்சேனை பாலத்தின் அண்மித்த பகுதியில் வீதியின் ஒரு பகுதி அடியோடு சேதமடைந்தது. இதனால், வீதியில் ஒரு பெரிய பள்ளம் திடீரென ஏற்பட்டது.
சீரான ஒளியோ அல்லது போதுமான எச்சரிக்கை பலகைகளோ இல்லாத நிலையில், குறித்த முச்சக்கர வண்டி சாரதி இந்தப் பள்ளத்தை எதிர்பாராத விதமாக கடக்க முயன்ற போது, அதில் சிக்கி கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், விபத்துக்கான முதன்மைக் காரணம், வெள்ளம் காரணமாக வீதி சேதம் அடைந்து, பாரிய குழி ஏற்பட்டமையே என உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்தில் காயம் அடைந்த சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவிகள் வழங்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பகுதியில் மேலும் விபத்துகள் நடைபெறுவதைத் தவிர்க்கும் நோக்கில், வெள்ளத்தால் சேதமடைந்த இந்தப் பாலப் பகுதியை அவசரமாக சீரமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வெள்ளம் ஏற்படுத்திய பள்ளத்தில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து கிண்ணியாவில் சம்பவம் கிண்ணியா - முனைச்சேனை பாலப் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதியில் ஏற்பட்ட பாரிய குழியில் வீழ்ந்ததன் காரணமாக முச்சக்கர வண்டி ஒன்று நேற்று இரவு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாகச் சேதமடைந்தபோதிலும், அதன் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.கனமழையின் காரணமாகப் பெருக்கெடுத்த வெள்ளம் வடியாத நிலையில், முறைச்சேனை பாலத்தின் அண்மித்த பகுதியில் வீதியின் ஒரு பகுதி அடியோடு சேதமடைந்தது. இதனால், வீதியில் ஒரு பெரிய பள்ளம் திடீரென ஏற்பட்டது.சீரான ஒளியோ அல்லது போதுமான எச்சரிக்கை பலகைகளோ இல்லாத நிலையில், குறித்த முச்சக்கர வண்டி சாரதி இந்தப் பள்ளத்தை எதிர்பாராத விதமாக கடக்க முயன்ற போது, அதில் சிக்கி கவிழ்ந்துள்ளது.இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், விபத்துக்கான முதன்மைக் காரணம், வெள்ளம் காரணமாக வீதி சேதம் அடைந்து, பாரிய குழி ஏற்பட்டமையே என உறுதிப்படுத்தியுள்ளனர்.விபத்தில் காயம் அடைந்த சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவிகள் வழங்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பகுதியில் மேலும் விபத்துகள் நடைபெறுவதைத் தவிர்க்கும் நோக்கில், வெள்ளத்தால் சேதமடைந்த இந்தப் பாலப் பகுதியை அவசரமாக சீரமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.