• Jul 19 2026

வளையல், பாசிமணி சான்றுப்பொருள்களுடன் - இன்றும் 6 எலும்புக்கூடுகள் மீட்பு!

shanu / Jul 18th 2026, 10:26 pm
image

செம்மணியில் இன்றைய அகழ்வில் வளையல், பாசிமணி, இரும்புத்தகடு உள்ளிட்ட சான்றுப்பொருள்களுடன் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. 


செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆம் நாள் அகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.


இன்றைய அகழ்வின் போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 437 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 428 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


மேலும் இன்றைய அகழ்வின் போது வெள்ளை நிற பாசிமணியும், இரும்புத் தகட்டுத் துண்டும் ஒன்றும், வளையல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டு சான்றுப்பொருள்களாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

வளையல், பாசிமணி சான்றுப்பொருள்களுடன் - இன்றும் 6 எலும்புக்கூடுகள் மீட்பு செம்மணியில் இன்றைய அகழ்வில் வளையல், பாசிமணி, இரும்புத்தகடு உள்ளிட்ட சான்றுப்பொருள்களுடன் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆம் நாள் அகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.இன்றைய அகழ்வின் போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 437 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 428 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.மேலும் இன்றைய அகழ்வின் போது வெள்ளை நிற பாசிமணியும், இரும்புத் தகட்டுத் துண்டும் ஒன்றும், வளையல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டு சான்றுப்பொருள்களாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement