• Jun 16 2026

கட்டுப்பாட்டை இழந்து 75 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி; உயிர்தப்பிய சாரதி

Chithra / Jun 16th 2026, 10:35 am
image


ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கரோலினா பகுதியில் நேற்று (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 75 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.


பொலிஸார் தெரிவிக்கையில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.


விபத்து இடம்பெற்ற வேளையில், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர் ஒருவரும் முச்சக்கரவண்டியில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த விபத்தில் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்த சாரதி உடனடியாக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்து 75 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி; உயிர்தப்பிய சாரதி ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கரோலினா பகுதியில் நேற்று (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 75 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.பொலிஸார் தெரிவிக்கையில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.விபத்து இடம்பெற்ற வேளையில், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர் ஒருவரும் முச்சக்கரவண்டியில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்த சாரதி உடனடியாக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement