• May 05 2026

மயானத்தில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு! வவுனியாவில் பரபரப்பு

Chithra / Feb 24th 2026, 2:23 pm
image

 வவுனியா - ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


அந்தப்பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிசாருக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டிருந்தது.


இதனையடுத்து அந்தப்பகுதிக்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


சுமார் 40-45 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர். 


அவரது உடலில் சிறுபகுதி தீயினால் எரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


மயானத்தில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு வவுனியாவில் பரபரப்பு  வவுனியா - ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப்பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிசாருக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டிருந்தது.இதனையடுத்து அந்தப்பகுதிக்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சுமார் 40-45 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர். அவரது உடலில் சிறுபகுதி தீயினால் எரிந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement