• May 02 2026

ஹட்டன் பஸ் விபத்து; சிகிச்சை பலனின்றி மற்றுமொருவர் மரணம்

Aathira / May 2nd 2026, 10:21 am
image

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ், டிக்கோயா போடையிஸ் பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது என்று ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை மாலை 3 மணியளவில் டிக்கோயா போடையிஸ் வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்தம் 34 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக அம்புலன்ஸ் மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

விபத்தின் போது பலத்த காயமடைந்த அக்கரப்பத்தனை, வேவல்லி தோட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் எஸ்.சிவபாலன், ஏற்கனவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 66 வயதுடைய பி.லூக்ஸ் என்பவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்த ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹட்டன் பஸ் விபத்து; சிகிச்சை பலனின்றி மற்றுமொருவர் மரணம் டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ், டிக்கோயா போடையிஸ் பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது என்று ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த புதன்கிழமை மாலை 3 மணியளவில் டிக்கோயா போடையிஸ் வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்தம் 34 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த அனைவரும் உடனடியாக அம்புலன்ஸ் மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.விபத்தின் போது பலத்த காயமடைந்த அக்கரப்பத்தனை, வேவல்லி தோட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் எஸ்.சிவபாலன், ஏற்கனவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 66 வயதுடைய பி.லூக்ஸ் என்பவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்த ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement