வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர், யுவதிகளினால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களின் கண்காட்சியொன்று இன்று (06-26) வவுனியாவில் அமைந்துள்ள வட மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர ஆகியோரின் தலைமையில் இக்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
குறித்த கண்காட்சியில் கைவினைப் பொருட்கள், ஆடைகள், மணமகள் அலங்காரம் மற்றும் உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இருந்தன.
வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வட மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பயிற்சித் திட்டங்களின் பின்னர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொண்டு அவர்களால் உருவாக்கப்பட்ட புதிய தயாரிப்புகளே இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ். ரவிகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியாவில் வேலையற்ற இளைஞர், யுவதிகளின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர், யுவதிகளினால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களின் கண்காட்சியொன்று இன்று (06-26) வவுனியாவில் அமைந்துள்ள வட மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர ஆகியோரின் தலைமையில் இக்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.குறித்த கண்காட்சியில் கைவினைப் பொருட்கள், ஆடைகள், மணமகள் அலங்காரம் மற்றும் உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இருந்தன.வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வட மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பயிற்சித் திட்டங்களின் பின்னர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொண்டு அவர்களால் உருவாக்கப்பட்ட புதிய தயாரிப்புகளே இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ். ரவிகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.