• May 17 2026

வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம் - ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

shanu / Sep 20th 2025, 5:50 pm
image

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா நாளை 21ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகவுள்ளது.  


வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான குருமார் திருவிழா கிரியைகளை மேற்கொள்ளவுள்ளனர்.


வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவில் இரண்டாம் நாளான 22ஆம் திகதி  திங்கட்கிழமை முதல்  7ஆம் திருவிழாவான 27 ஆம் திகதி வரை உள்வீதியுலாவும், 

28ஆம் திகதி வெளிவீதியில் ஞாயிறுக்கிழமை  குருக்கட்டு விநாயகர் தரிசனமும்,  29 திங்கட்கிழமை  வெண்ணைத்  திருவிழாவும், 30 செவ்வாய்க்கிழமை  துகில் திருவிழாவும்,  

01.10 புதன்கிழமை  பாம்பு திருவிழாவும், 02.10 வியாழக்கிழமை  கம்சன் போர் திருவிழாவும், 

03.10  வெள்ளிக்கிழமை  வேட்டை திருவிழாவும், 04.10 சனிக்கிழமை  சப்பறத்திருவிழாவும், 

05.10  ஞாயிறுக்கிழமை  தேர்த்திருவிழாவும், 06.10  திங்கட்கிழமை  சமுத்திர தீர்த்த திருவிழாவும், 

07.10 செவ்வாய்க்கிழமை  பட்டுத்தீர்த்த திருவிழாவும், 08.10 ஆஞ்சநேயர்மடையும் இடம்பெறவுள்ளது.


திருவிழாவிற்க்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பருத்தித்துறை பிரதேச சபையும் மேற்கொண்டுள்ளதுடன்,  நிர்வாக ஒழுங்குகளை பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர் அவர்கள் தலைமையிலும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் ஏனைய பணிகளையும் மேற்கொண்டுள்ளதுடன் பருத்தித்துறை  பொலிஸ் நிலையம் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம் - ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா நாளை 21ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகவுள்ளது.  வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான குருமார் திருவிழா கிரியைகளை மேற்கொள்ளவுள்ளனர்.வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவில் இரண்டாம் நாளான 22ஆம் திகதி  திங்கட்கிழமை முதல்  7ஆம் திருவிழாவான 27 ஆம் திகதி வரை உள்வீதியுலாவும், 28ஆம் திகதி வெளிவீதியில் ஞாயிறுக்கிழமை  குருக்கட்டு விநாயகர் தரிசனமும்,  29 திங்கட்கிழமை  வெண்ணைத்  திருவிழாவும், 30 செவ்வாய்க்கிழமை  துகில் திருவிழாவும்,  01.10 புதன்கிழமை  பாம்பு திருவிழாவும், 02.10 வியாழக்கிழமை  கம்சன் போர் திருவிழாவும், 03.10  வெள்ளிக்கிழமை  வேட்டை திருவிழாவும், 04.10 சனிக்கிழமை  சப்பறத்திருவிழாவும், 05.10  ஞாயிறுக்கிழமை  தேர்த்திருவிழாவும், 06.10  திங்கட்கிழமை  சமுத்திர தீர்த்த திருவிழாவும், 07.10 செவ்வாய்க்கிழமை  பட்டுத்தீர்த்த திருவிழாவும், 08.10 ஆஞ்சநேயர்மடையும் இடம்பெறவுள்ளது.திருவிழாவிற்க்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பருத்தித்துறை பிரதேச சபையும் மேற்கொண்டுள்ளதுடன்,  நிர்வாக ஒழுங்குகளை பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர் அவர்கள் தலைமையிலும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் ஏனைய பணிகளையும் மேற்கொண்டுள்ளதுடன் பருத்தித்துறை  பொலிஸ் நிலையம் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement