• Aug 14 2026

மான்களுடன் பொழுதைக் கழிக்கும் வெளிநாட்டுப் பயணிகள் - திருமலையில் குவியும் சுற்றுலா பயணிகள்

Chithra / Aug 14th 2026, 10:56 am
image


திருகோணமலையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மான் பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடித் திரியும் மான்கள், தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்து இழுத்து வருகின்றன.


பல நாடுகளிலிருந்து மக்கள் திருகோணமலைக்கு வரகை தருகின்றனர். 


நகரப் பகுதியிலும், மான் பூங்காவிலும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக உலா வரும் இந்த மான் இனங்களைப் பார்வையிடுவதற்காகவே அண்மைக்காலமாக திருகோணமலைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.


இங்கு வரும் பயணிகள் மான்களுக்கு உணவளித்தும், அவற்றுடன் புகைப்படங்கள் மற்றும் சுயவிவரப் படங்கள் (Selfies) எடுத்தும், மிகவும் மகிழ்ச்சியோடு பொழுதைக் கழித்து வருகின்றனர்.


மனிதர்களோடு மிகவும் இயல்பாகப் பழகும் இந்த மான்களின் குணம், தங்களுக்கு ஒரு புதுவிதமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைத் தருவதாக வெளிநாட்டுப் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.


திருகோணமலையின் இயற்கை எழிலோடு, இந்த மான்களின் பிரசன்னமும் இணைந்து பிராந்தியத்தின் சுற்றுலாத்துறையை மேலும் ஒரு படி முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளதாக உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்தோர் மகிழ்ச்சி வெளியிடுகின்றனர்.


மான்களுடன் பொழுதைக் கழிக்கும் வெளிநாட்டுப் பயணிகள் - திருமலையில் குவியும் சுற்றுலா பயணிகள் திருகோணமலையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மான் பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடித் திரியும் மான்கள், தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்து இழுத்து வருகின்றன.பல நாடுகளிலிருந்து மக்கள் திருகோணமலைக்கு வரகை தருகின்றனர். நகரப் பகுதியிலும், மான் பூங்காவிலும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக உலா வரும் இந்த மான் இனங்களைப் பார்வையிடுவதற்காகவே அண்மைக்காலமாக திருகோணமலைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.இங்கு வரும் பயணிகள் மான்களுக்கு உணவளித்தும், அவற்றுடன் புகைப்படங்கள் மற்றும் சுயவிவரப் படங்கள் (Selfies) எடுத்தும், மிகவும் மகிழ்ச்சியோடு பொழுதைக் கழித்து வருகின்றனர்.மனிதர்களோடு மிகவும் இயல்பாகப் பழகும் இந்த மான்களின் குணம், தங்களுக்கு ஒரு புதுவிதமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைத் தருவதாக வெளிநாட்டுப் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.திருகோணமலையின் இயற்கை எழிலோடு, இந்த மான்களின் பிரசன்னமும் இணைந்து பிராந்தியத்தின் சுற்றுலாத்துறையை மேலும் ஒரு படி முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளதாக உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்தோர் மகிழ்ச்சி வெளியிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement