• Jun 28 2026

கத்தி வெட்டு தாக்குதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு - யாழில் சம்பவம்

Chithra / Jun 28th 2026, 11:15 am
image


கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 


உயிரிழந்தவர் 39 வயதுடைய ரகு துஷ்யந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


விசாரணை தகவலின்படி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதேவேளை, இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் முன்னதாக வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். அப்போது, அவரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.


இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கத்தி வெட்டு தாக்குதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு - யாழில் சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 39 வயதுடைய ரகு துஷ்யந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.விசாரணை தகவலின்படி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதேவேளை, இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் முன்னதாக வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். அப்போது, அவரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement