• May 17 2026

20 மில்லியனுக்கும் அதிகமான தொகை அரசாங்கத்திடம் இல்லாமல் போயுள்ளது; இந்த கமிஷன் தொகை யாருக்கு? சபையில் முஜிபுர் எம்.பி கேள்வி!

shanu / Jan 7th 2026, 3:00 pm
image

சூரியசக்தி திட்டத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான தொகை அரசாங்கத்திற்கு இல்லாமல் போயுள்ளது. இந்தத் தொகை யாருக்கு செல்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  கேள்வியெழுப்பியுள்ளார். 


பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


அமைச்சரவையில் ரென்டர் கோராமல் தீர்மானம் எடுக்கப்பட்டது. சூரியசக்தி திட்டத்தில் 10ஆக இருந்தததை 17ஆக வாங்குகிறார்கள். 1000 மெகாவோல்ட்டை 17ரூபாவிற்கு வாங்கிறார்கள்.  

அப்போதைய காற்றாலை மின்திட்டத்தில் யுனிற் ஒன்றை 11ரூபா 80 சதத்திற்கு வாங்கினார்கள். தற்போதைய திட்டத்தில் யுனிற் ஒன்றை  20 ரூபாவுக்கு வாங்குகிறது. இந்த கமிஷன் தொகை யாருக்கு செல்கிறது. 


ஜனாதிபதியின் நெருக்கமானவருக்கு 50 மெகாவாட் மன்னாரிலுள்ளவருக்கு வழங்கப்பட்டது.நிராகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது. 


பழைய அரசாங்கம் செய்தவற்றை மிஞ்சிய களவு செயற்பாட்டில் தான் தற்போது ஈடுபடுகின்றீர்கள் என்று சபையில் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.

20 மில்லியனுக்கும் அதிகமான தொகை அரசாங்கத்திடம் இல்லாமல் போயுள்ளது; இந்த கமிஷன் தொகை யாருக்கு சபையில் முஜிபுர் எம்.பி கேள்வி சூரியசக்தி திட்டத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான தொகை அரசாங்கத்திற்கு இல்லாமல் போயுள்ளது. இந்தத் தொகை யாருக்கு செல்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  கேள்வியெழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவையில் ரென்டர் கோராமல் தீர்மானம் எடுக்கப்பட்டது. சூரியசக்தி திட்டத்தில் 10ஆக இருந்தததை 17ஆக வாங்குகிறார்கள். 1000 மெகாவோல்ட்டை 17ரூபாவிற்கு வாங்கிறார்கள்.  அப்போதைய காற்றாலை மின்திட்டத்தில் யுனிற் ஒன்றை 11ரூபா 80 சதத்திற்கு வாங்கினார்கள். தற்போதைய திட்டத்தில் யுனிற் ஒன்றை  20 ரூபாவுக்கு வாங்குகிறது. இந்த கமிஷன் தொகை யாருக்கு செல்கிறது. ஜனாதிபதியின் நெருக்கமானவருக்கு 50 மெகாவாட் மன்னாரிலுள்ளவருக்கு வழங்கப்பட்டது.நிராகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது. பழைய அரசாங்கம் செய்தவற்றை மிஞ்சிய களவு செயற்பாட்டில் தான் தற்போது ஈடுபடுகின்றீர்கள் என்று சபையில் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement