• May 16 2026

நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று முன்னிலையாகாத ஷிரந்தி: கால அவகாசம் கோரிக்கை!

Chithra / Jan 27th 2026, 9:33 am
image


தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் (27) பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார். 


இதற்கமைய, அங்கு முன்னிலையாவதற்காக அவர் இரண்டு வார கால அவகாசத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இன்று (27) காலை 09 மணிக்கு  பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.


மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ‘சிரிலிய’ என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட கணக்கில் நடத்தப்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டதாக பொலிஸ் நிதி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நல்லாட்சி காலத்தில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டன.


இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில், நேற்று காலை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று முன்னிலையாகாத ஷிரந்தி: கால அவகாசம் கோரிக்கை தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் (27) பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கமைய, அங்கு முன்னிலையாவதற்காக அவர் இரண்டு வார கால அவகாசத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இன்று (27) காலை 09 மணிக்கு  பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ‘சிரிலிய’ என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட கணக்கில் நடத்தப்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டதாக பொலிஸ் நிதி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நல்லாட்சி காலத்தில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டன.இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில், நேற்று காலை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement