• Apr 18 2026

வைத்தியசாலை கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

Chithra / Apr 13th 2026, 1:11 pm
image

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (13) சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கழிவுநீர் தொட்டியில் சிசுவின் சடலம் இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.


இந்தச் சிசு யாருடையது என்பது குறித்த எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. 


இது தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று மாலை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸ் பரிசோதகர் கே.பி.பி. பத்திரண தெரிவித்தார்.


இச்சம்பவம் குறித்து பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.


வைத்தியசாலை கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (13) சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கழிவுநீர் தொட்டியில் சிசுவின் சடலம் இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.இந்தச் சிசு யாருடையது என்பது குறித்த எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. இது தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று மாலை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸ் பரிசோதகர் கே.பி.பி. பத்திரண தெரிவித்தார்.இச்சம்பவம் குறித்து பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement