• May 18 2026

நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது! விசாரணையில் வெளிவந்த தகவல்

Chithra / Dec 30th 2025, 11:30 am
image


யாழ்ப்பாணத்தில் நான்கு கிலோகிராம் 800 கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றையதினம் அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.


வரணி பகுதியைச் சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.


29 வயதுடைய சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது விசாரணையில் வெளிவந்த தகவல் யாழ்ப்பாணத்தில் நான்கு கிலோகிராம் 800 கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றையதினம் அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.வரணி பகுதியைச் சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.29 வயதுடைய சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement