• Jul 03 2026

எரிபொருள் விலை குறைப்பு ஏமாற்று வேலை; மன்னார் எண்ணெய் அகழ்வாராய்ச்சி ஏன் நிறுத்தப்பட்டது? – உதய கம்மன்பில கேள்வி

Chithra / Jul 2nd 2026, 3:45 pm
image


பிவிதுறு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில, அரசாங்கத்தின் அண்மைய எரிபொருள் விலை குறைப்பை "மக்களை ஏமாற்றும் நடவடிக்கை" எனக் குற்றஞ்சாட்டியதுடன், மன்னார் படுகையில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவள அகழ்வாராய்ச்சி திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கும் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


இன்று (02) பிட்டகோட்டேயில் அமைந்துள்ள பிவிதுறு ஹெல உருமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தபோதிலும், அதன் முழுமையான பயன் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்றார்.


ஈரான் போர் தொடங்கிய காலத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 72.87 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், ஜூன் 29ஆம் திகதி அது 72.55 டொலராகக் குறைந்திருந்ததாகக் குறிப்பிட்ட கம்மன்பில, இந்த நிலைமையில் போருக்கு முன்பிருந்த விலையிலோ அல்லது அதைவிடக் குறைவான விலையிலோ எரிபொருளை வழங்க அரசாங்கத்தால் முடியும் என்றார்.


போருக்கு முன்பு 293 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை தற்போது 414 ரூபாயாக இருப்பதாகவும், அது மேலும் 131 ரூபாயால் குறைக்கப்பட வேண்டுமெனவும் அவர் கணக்கிட்டுக் காட்டினார். அதேபோல், ஒட்டோ டீசல், ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேலும் குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.


அதிக விலைக்கு வாங்கிய எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அரசாங்கம் கூறும் விளக்கம் நம்பகமற்றது என்றும், உலகச் சந்தையில் விலை குறைந்தும் அதன் நன்மையை மக்களுக்கு வழங்காமல் இருப்பது இடைத்தரகர் ஊழலை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.


மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பேரல் கச்சா எண்ணெயும், 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவளமும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கம்மன்பில, அவற்றின் மொத்த மதிப்பு 229 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்றார்.


2022ஆம் ஆண்டு நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போதிலும், இந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கான அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் பன்னாட்டு அழுத்தங்களால் நிறுத்தப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.


தாம் எரிசக்தி அமைச்சராக இருந்த காலத்தில் எண்ணெய் அகழ்வாராய்ச்சிக்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை உருவாக்கி, 873 வரைபடக் கட்டங்களை ஏலத்திற்கு தயார்படுத்தியிருந்ததாகவும், ஏலத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை, முன்னாள் இராணுவ உளவுத்துறை பிரதானி சுரேஷ் சலேயின் கடவுச்சொல் விவகாரம் குறித்தும் கருத்து வெளியிட்ட கம்மன்பில, விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் கடவுச்சொற்களை வழங்குமாறு அரசாங்கம் வலியுறுத்துவது சட்டத்திற்கு முரணானது என்றார்.


குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை தனக்கு எதிரான விசாரணைக்கு உதவுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும், அமைதியாக இருக்க அவருக்கு உரிமை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பதாகத் தெரிவித்தாலும், அதனுடன் உடன்படவில்லை எனக் கூறிய அவர், சுரேஷ் சலேயின் சட்டத்தரணிகள் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.


மேலும், தேசிய பாதுகாப்பு, உளவுத்துறை தகவலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கடந்த கால அனுபவங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் சுரேஷ் சலே தனது கடவுச்சொற்களை வழங்காமல் இருப்பது நியாயமானது எனவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எரிபொருள் விலை குறைப்பு ஏமாற்று வேலை; மன்னார் எண்ணெய் அகழ்வாராய்ச்சி ஏன் நிறுத்தப்பட்டது – உதய கம்மன்பில கேள்வி பிவிதுறு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில, அரசாங்கத்தின் அண்மைய எரிபொருள் விலை குறைப்பை "மக்களை ஏமாற்றும் நடவடிக்கை" எனக் குற்றஞ்சாட்டியதுடன், மன்னார் படுகையில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவள அகழ்வாராய்ச்சி திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கும் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இன்று (02) பிட்டகோட்டேயில் அமைந்துள்ள பிவிதுறு ஹெல உருமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தபோதிலும், அதன் முழுமையான பயன் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்றார்.ஈரான் போர் தொடங்கிய காலத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 72.87 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், ஜூன் 29ஆம் திகதி அது 72.55 டொலராகக் குறைந்திருந்ததாகக் குறிப்பிட்ட கம்மன்பில, இந்த நிலைமையில் போருக்கு முன்பிருந்த விலையிலோ அல்லது அதைவிடக் குறைவான விலையிலோ எரிபொருளை வழங்க அரசாங்கத்தால் முடியும் என்றார்.போருக்கு முன்பு 293 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை தற்போது 414 ரூபாயாக இருப்பதாகவும், அது மேலும் 131 ரூபாயால் குறைக்கப்பட வேண்டுமெனவும் அவர் கணக்கிட்டுக் காட்டினார். அதேபோல், ஒட்டோ டீசல், ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேலும் குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.அதிக விலைக்கு வாங்கிய எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அரசாங்கம் கூறும் விளக்கம் நம்பகமற்றது என்றும், உலகச் சந்தையில் விலை குறைந்தும் அதன் நன்மையை மக்களுக்கு வழங்காமல் இருப்பது இடைத்தரகர் ஊழலை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பேரல் கச்சா எண்ணெயும், 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவளமும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கம்மன்பில, அவற்றின் மொத்த மதிப்பு 229 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்றார்.2022ஆம் ஆண்டு நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போதிலும், இந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கான அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் பன்னாட்டு அழுத்தங்களால் நிறுத்தப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.தாம் எரிசக்தி அமைச்சராக இருந்த காலத்தில் எண்ணெய் அகழ்வாராய்ச்சிக்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை உருவாக்கி, 873 வரைபடக் கட்டங்களை ஏலத்திற்கு தயார்படுத்தியிருந்ததாகவும், ஏலத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, முன்னாள் இராணுவ உளவுத்துறை பிரதானி சுரேஷ் சலேயின் கடவுச்சொல் விவகாரம் குறித்தும் கருத்து வெளியிட்ட கம்மன்பில, விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் கடவுச்சொற்களை வழங்குமாறு அரசாங்கம் வலியுறுத்துவது சட்டத்திற்கு முரணானது என்றார்.குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை தனக்கு எதிரான விசாரணைக்கு உதவுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும், அமைதியாக இருக்க அவருக்கு உரிமை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பதாகத் தெரிவித்தாலும், அதனுடன் உடன்படவில்லை எனக் கூறிய அவர், சுரேஷ் சலேயின் சட்டத்தரணிகள் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.மேலும், தேசிய பாதுகாப்பு, உளவுத்துறை தகவலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கடந்த கால அனுபவங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் சுரேஷ் சலே தனது கடவுச்சொற்களை வழங்காமல் இருப்பது நியாயமானது எனவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement