• May 18 2026

கட்டைக்காட்டில் வருடத்தின் முதல் நாள் ஆசிர்வதிக்கப்பட்ட கடற்தொழில்

Aathira / Jan 3rd 2026, 8:37 am
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இன்றைய தினம்  கடற்றொழில் ஆசிர்வாதத்துடன் கடலில் இறக்கப்பட்டது.

வருடத் திருப்பலியின் போது குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட குறித்த பிரதேசத்தை சேர்ந்த பேதுருப்பிள்ளை அன்ரனி விமலதாஸ் இந்த வருடத்திற்கான நாள் தொழிலை கட்டைக்காடு மக்கள் சார்பாக முதன் முதலாக ஆரம்பித்துவைத்தார்.

பங்குத்தந்தை வசந்தன் அடிகளாரின் ஆசிர்வாதத்துடனும் ஊர்மக்களின் ஆதரவுடனும் இன்று காலை 08.10 மணியளவில் நாள் தொழில் கடலில் இறக்கப்பட்டது.

இதன் பிறகு ஏனைய மீனவர்களின் படகுகள் ஒவ்வொன்றாக தங்களுடைய மீன்பிடி நடவடிக்கைகளை இனிதே ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பங்குத்தந்தை,கிராம மக்கள்,கட்டைக்காடு கடற்றொழில் சங்க நிர்வாகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கட்டைக்காட்டில் வருடத்தின் முதல் நாள் ஆசிர்வதிக்கப்பட்ட கடற்தொழில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இன்றைய தினம்  கடற்றொழில் ஆசிர்வாதத்துடன் கடலில் இறக்கப்பட்டது.வருடத் திருப்பலியின் போது குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட குறித்த பிரதேசத்தை சேர்ந்த பேதுருப்பிள்ளை அன்ரனி விமலதாஸ் இந்த வருடத்திற்கான நாள் தொழிலை கட்டைக்காடு மக்கள் சார்பாக முதன் முதலாக ஆரம்பித்துவைத்தார்.பங்குத்தந்தை வசந்தன் அடிகளாரின் ஆசிர்வாதத்துடனும் ஊர்மக்களின் ஆதரவுடனும் இன்று காலை 08.10 மணியளவில் நாள் தொழில் கடலில் இறக்கப்பட்டது.இதன் பிறகு ஏனைய மீனவர்களின் படகுகள் ஒவ்வொன்றாக தங்களுடைய மீன்பிடி நடவடிக்கைகளை இனிதே ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வில் பங்குத்தந்தை,கிராம மக்கள்,கட்டைக்காடு கடற்றொழில் சங்க நிர்வாகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement