• Jun 19 2026

நெடுந்தீவில் காணாமல்போன மீனவர் நாகபட்டினம் கடற்கரையில் சடலமாக மீட்பு

Chithra / Jun 19th 2026, 2:09 pm
image


யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர், காணாமல் போன நிலையில் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிடைத்த தகவல்களின் படி, குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்றிருந்தபோது காணாமல் போயுள்ளார்.


சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகளும் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.


இந்நிலையில், இன்றைய தினம் அவரது சடலம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இந்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் காணாமல்போன மீனவர் நாகபட்டினம் கடற்கரையில் சடலமாக மீட்பு யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர், காணாமல் போன நிலையில் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிடைத்த தகவல்களின் படி, குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்றிருந்தபோது காணாமல் போயுள்ளார்.சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகளும் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.இந்நிலையில், இன்றைய தினம் அவரது சடலம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இந்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement