• Jun 30 2026

வேலியை உடைத்து கொண்டு பாய்ந்த மோட்டார் சைக்கிள் - இளைஞன் பலி

Chithra / Jun 30th 2026, 10:45 am
image

 


மட்டக்களப்பு - ஏறாவூர் குடியிருப்பு வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் தகர வேலியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளானதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த விபத்தில் ஏறாவூர் மீராகேணி மையத்துப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஆதில் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது. 


இளம் வயதுடைய இளைஞரின் திடீர் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேலியை உடைத்து கொண்டு பாய்ந்த மோட்டார் சைக்கிள் - இளைஞன் பலி  மட்டக்களப்பு - ஏறாவூர் குடியிருப்பு வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் தகர வேலியை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளானதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த விபத்தில் ஏறாவூர் மீராகேணி மையத்துப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஆதில் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது. இளம் வயதுடைய இளைஞரின் திடீர் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement