• Sep 01 2026

கடலில் நீராடச் சென்ற தாய், மகள் உட்பட நால்வர்! தீவிரமாக தேடும் பொலிஸார்

Chithra / Aug 31st 2026, 10:03 am
image


கம்பஹா, பமுனுகம – எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காணாமல் போனவர்களில் 35 வயதுடைய பெண்ணொருவர், 

அவரது 4 வயது மகள், 13 வயதுடைய சிறுவன் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகியோர் அடங்குகின்றனர்.


இவர்கள் அனைவரும் ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடலில் நீராடச் சென்ற தாய், மகள் உட்பட நால்வர் தீவிரமாக தேடும் பொலிஸார் கம்பஹா, பமுனுகம – எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காணாமல் போனவர்களில் 35 வயதுடைய பெண்ணொருவர், அவரது 4 வயது மகள், 13 வயதுடைய சிறுவன் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகியோர் அடங்குகின்றனர்.இவர்கள் அனைவரும் ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement