நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நால்வரும் இன்று (30) வியாழக்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நுவரெலியா நீதவான் திருமதி புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் நாரம்மல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர மற்றும் அவரது 35 வயதுடைய மனைவி ரத்நாயக்க முதியன்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க ஆகியோரும் அடங்குகின்றனர்.
அத்துடன், கொலைச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் 49 வயதுடைய சாரதி ஜயசிங்க ஆராச்சிகே ரஜித சாலிய சமரசிங்க மற்றும் குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொலிஸ் பரிசோதகர் அனில் ஆரியவங்ச ஆகியோரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
நுவரெலியா உடற் சிகிச்சை நிபுணர் கொலை: 4 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.குறித்த நால்வரும் இன்று (30) வியாழக்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டனர்.நுவரெலியா நீதவான் திருமதி புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் நாரம்மல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர மற்றும் அவரது 35 வயதுடைய மனைவி ரத்நாயக்க முதியன்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க ஆகியோரும் அடங்குகின்றனர்.அத்துடன், கொலைச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் 49 வயதுடைய சாரதி ஜயசிங்க ஆராச்சிகே ரஜித சாலிய சமரசிங்க மற்றும் குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொலிஸ் பரிசோதகர் அனில் ஆரியவங்ச ஆகியோரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.