• Jul 30 2026

நாட்டின் நலனுக்காக எந்தவொரு தரப்புடனும் கூட்டணிக்கு தயார் – நாமல் ராஜபக்ச அதிரடி

Chithra / Jul 30th 2026, 9:37 am
image


நாட்டின் நலனுக்காக எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


அரசியலை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக முன்னெடுக்க தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்த நாமல் ராஜபக்ச, தனிநபர்களின் நலன்களை விட நாட்டு மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை, கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவரும் தம்முடன் இணைந்துகொள்ளலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


கடந்த காலங்களில் பலர் கட்சியிலிருந்து விலகிச் சென்றிருந்தாலும், புதியவர்கள் பலர் கட்சியுடன் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கட்சியை மேலும் பலப்படுத்துவதற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது பொறுப்பு எனவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எனினும், இரகசிய அரசியல் பேரங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் நலனுக்காக எந்தவொரு தரப்புடனும் கூட்டணிக்கு தயார் – நாமல் ராஜபக்ச அதிரடி நாட்டின் நலனுக்காக எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அரசியலை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக முன்னெடுக்க தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்த நாமல் ராஜபக்ச, தனிநபர்களின் நலன்களை விட நாட்டு மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவரும் தம்முடன் இணைந்துகொள்ளலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.கடந்த காலங்களில் பலர் கட்சியிலிருந்து விலகிச் சென்றிருந்தாலும், புதியவர்கள் பலர் கட்சியுடன் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கட்சியை மேலும் பலப்படுத்துவதற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது பொறுப்பு எனவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.எனினும், இரகசிய அரசியல் பேரங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement