• Jun 21 2026

வட்டுக்கோட்டை பிரகடனம் - 50 ஆவது ஆண்டு; மக்கள் எழுச்சியுடன் ஆரம்பம்!

shanu / Jun 20th 2026, 10:02 pm
image

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு இன்று (20) வெகு சிறப்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.


50 எழுச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் இன்று (20) மதியம் 3 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில்  தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி குறித்த நிகழ்வு ஆரம்பமானது.


அதன்பின் மணிக்கூட்டு கோபுரம் சதுக்கத்தை ஊர்வலமாக வந்தடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு வீற்றிருக்கும் தமிழ் மும் மன்னர்களுக்கும் அஞ்சலி செலுத்தி நிகழ்வின் ஏற்பாட்டு மண்டபத்தை சென்றடைந்த நிலையில்

தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு மாநாடு தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மட்டக்களப்பு ஆதீன முதல்வர் அகத்தியர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


மாநாட்டில் இந்து, கிறித்தவ மத குருமார்கள் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன், யாழ் மாநகரின்  முன்னாள் முதல்வர் மணிவண்ணன்  உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன் நூற்றுக்கணக்கான பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வட்டுக்கோட்டை பிரகடனம் - 50 ஆவது ஆண்டு; மக்கள் எழுச்சியுடன் ஆரம்பம் வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு இன்று (20) வெகு சிறப்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.50 எழுச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் இன்று (20) மதியம் 3 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில்  தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி குறித்த நிகழ்வு ஆரம்பமானது.அதன்பின் மணிக்கூட்டு கோபுரம் சதுக்கத்தை ஊர்வலமாக வந்தடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு வீற்றிருக்கும் தமிழ் மும் மன்னர்களுக்கும் அஞ்சலி செலுத்தி நிகழ்வின் ஏற்பாட்டு மண்டபத்தை சென்றடைந்த நிலையில்தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு மாநாடு தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மட்டக்களப்பு ஆதீன முதல்வர் அகத்தியர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.மாநாட்டில் இந்து, கிறித்தவ மத குருமார்கள் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன், யாழ் மாநகரின்  முன்னாள் முதல்வர் மணிவண்ணன்  உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன் நூற்றுக்கணக்கான பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement