• May 21 2026

சீரற்ற காலநிலை ஜே.சி.பி இயந்திரம் மூலம் வெட்டப்பட்ட பெரியகல்லாறு முகத்துவாரம்

dorin / Nov 26th 2025, 9:44 pm
image

பெரியகல்லாறு முகத்துவாரம் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலையீட்டில் இன்று வெட்டப்பட்டது 

சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது,

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கி இருந்த நிலையில், பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலையீட்டில் இன்றைய தினம் பெரியகல்லாறு முகத்துவாரம் 02 JCB இயந்திரங்கள் மூலம் வெட்டப்பட்டு ஆற்று நீர் கடலில் விடப்பட்டது..

இன்றைய தினம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற அனர்த்த முன்னாயத்த கூட்டத்தின் பிரகாரம் இந்த முகாத்துவாரம் வெட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரித்த வெள்ளப்பெருக்கினால் இமக்கள் குடியிருப்புக்களில் ஆற்றுநீர் உட்புகுந்துள்ள நிலையில் ஆற்றுவாய் வெட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலை ஜே.சி.பி இயந்திரம் மூலம் வெட்டப்பட்ட பெரியகல்லாறு முகத்துவாரம் பெரியகல்லாறு முகத்துவாரம் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலையீட்டில் இன்று வெட்டப்பட்டது சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது,மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கி இருந்த நிலையில், பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலையீட்டில் இன்றைய தினம் பெரியகல்லாறு முகத்துவாரம் 02 JCB இயந்திரங்கள் மூலம் வெட்டப்பட்டு ஆற்று நீர் கடலில் விடப்பட்டது.இன்றைய தினம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற அனர்த்த முன்னாயத்த கூட்டத்தின் பிரகாரம் இந்த முகாத்துவாரம் வெட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அதிகரித்த வெள்ளப்பெருக்கினால் இமக்கள் குடியிருப்புக்களில் ஆற்றுநீர் உட்புகுந்துள்ள நிலையில் ஆற்றுவாய் வெட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement