• Jun 27 2026

வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியது.! பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Aathira / Jun 27th 2026, 9:33 am
image

வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்குப் பிறகு, இன்று (27) மீண்டும் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த அதிர்வால் மீண்டும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முந்தைய நிலநடுக்கம் காரணமாக இதுவரை 920 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 3,360க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும், 243 பேர் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கராகஸ் உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் இன்னும் காணாமல் போயுள்ளதால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முதல் நிலநடுக்கத்துக்குப் பிறகு 214 பின்னதிர்வுகள் (aftershocks) பதிவாகியுள்ளதாகவும், 1,000க்கும் மேற்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக லா குவைரா பகுதி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளுக்கு பல்வேறு நாடுகளின் சர்வதேச குழுக்கள் உதவியளித்து வருகின்றன. எனினும், தொடர்ந்து நடைபெறும் பின்னதிர்வுகள் மற்றும் சேதம் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்குப் பிறகு, இன்று (27) மீண்டும் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த அதிர்வால் மீண்டும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.முந்தைய நிலநடுக்கம் காரணமாக இதுவரை 920 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 3,360க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும், 243 பேர் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கராகஸ் உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் இன்னும் காணாமல் போயுள்ளதால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.முதல் நிலநடுக்கத்துக்குப் பிறகு 214 பின்னதிர்வுகள் (aftershocks) பதிவாகியுள்ளதாகவும், 1,000க்கும் மேற்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக லா குவைரா பகுதி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.மீட்புப் பணிகளுக்கு பல்வேறு நாடுகளின் சர்வதேச குழுக்கள் உதவியளித்து வருகின்றன. எனினும், தொடர்ந்து நடைபெறும் பின்னதிர்வுகள் மற்றும் சேதம் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement