• Apr 18 2026

மணல் டிப்பரை துரத்தி துரத்திபொலிசார் துப்பாக்கி சூடு; மணலை கொட்டியபடி தப்பியோடிய கடத்தல்காரர்கள்

Chithra / Dec 31st 2025, 12:08 pm
image

 

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளது.


சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை பொலிசார் மறிக்க முற்பட்டபோது நிறுத்தாது குறித்த வாகனம் பயணித்துள்ளது.


பரவிப்பாஞ்சான் வீதியூடாக செல்ல முற்பட்ட குறித்த டிப்பர் வாகனத்தை துரத்திச்சென்று பொலிசாரால் ஐந்து தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பிச்சென்றுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மணல் டிப்பரை துரத்தி துரத்திபொலிசார் துப்பாக்கி சூடு; மணலை கொட்டியபடி தப்பியோடிய கடத்தல்காரர்கள்  கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிசார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளது.சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை பொலிசார் மறிக்க முற்பட்டபோது நிறுத்தாது குறித்த வாகனம் பயணித்துள்ளது.பரவிப்பாஞ்சான் வீதியூடாக செல்ல முற்பட்ட குறித்த டிப்பர் வாகனத்தை துரத்திச்சென்று பொலிசாரால் ஐந்து தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பிச்சென்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement