• Apr 19 2026

கட்டிலுக்கு அடியில் பெற்றோல்; பதுக்கி வைத்திருந்த பெண் அதிரடிக் கைது

Chithra / Mar 8th 2026, 7:29 pm
image

 

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர்.


கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த வீடொன்றில் பெற்றோல் பதுக்கி வைக்கப்பட்டு  விற்பனை செய்யப்பட்டு வருவதாக இன்று மாலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவு உப  பொலிஸ் பரிசோதகர்  கே.எல்.எம் முஸ்தபா  தலைமையிலான பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


இதன் போது குறித்த வீட்டின் கட்டிலின் கீழ் சூட்சுமமாக போத்தல் மற்றும் கலன்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில்  சுமார் 32 லீட்டர் பெற்றோல் மீட்கப்பட்டுள்ளன.


அத்துடன் 39 வயது மதிக்கத்தக்க பெண்  சந்தேக நபர்  கைதான நிலையில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.


மேலும்  குறித்த வழக்கு நாளை  கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டிலுக்கு அடியில் பெற்றோல்; பதுக்கி வைத்திருந்த பெண் அதிரடிக் கைது  வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர்.கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த வீடொன்றில் பெற்றோல் பதுக்கி வைக்கப்பட்டு  விற்பனை செய்யப்பட்டு வருவதாக இன்று மாலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவு உப  பொலிஸ் பரிசோதகர்  கே.எல்.எம் முஸ்தபா  தலைமையிலான பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இதன் போது குறித்த வீட்டின் கட்டிலின் கீழ் சூட்சுமமாக போத்தல் மற்றும் கலன்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில்  சுமார் 32 லீட்டர் பெற்றோல் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன் 39 வயது மதிக்கத்தக்க பெண்  சந்தேக நபர்  கைதான நிலையில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.மேலும்  குறித்த வழக்கு நாளை  கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement