• Jul 25 2026

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம் - பொலிஸார் தீவிர விசாரணை

Chithra / Jul 24th 2026, 11:52 am
image


கம்பஹா, கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


நேற்று (23) வியாழக்கிழமை கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


உயிரிழந்தவர் கட்டுகஸ்தர பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சடலத்திற்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


நீதவான் பரிசோதனைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


குறித்த நபரின் மரணம் தொடர்பான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம் - பொலிஸார் தீவிர விசாரணை கம்பஹா, கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.நேற்று (23) வியாழக்கிழமை கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.உயிரிழந்தவர் கட்டுகஸ்தர பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலத்திற்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.நீதவான் பரிசோதனைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த நபரின் மரணம் தொடர்பான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement