• Sep 04 2026

மோட்டார் சைக்கிள் திருட்டு: ‘பொம்புவல சுத்தா’ கைது

Chithra / Sep 3rd 2026, 12:23 pm
image


பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 30 வயதுடைய நபர் ஒருவர் களுத்துறை மாவட்ட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


‘பொம்புவல சுத்தா’ என அழைக்கப்படும் குறித்த சந்தேகநபர், களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொடை சந்திப்பு பகுதியில் கடை ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்போது, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.


இதனையடுத்து, களுத்துறை மாவட்ட குற்றப் பிரிவின் பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில், பொம்புவல பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், மோட்டார் சைக்கிளின் பதிவு இலக்கத்தை மாற்றும் நோக்கில் அதன் இலக்கத் தகட்டின் மீது ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும், இங்கிரிய, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ள பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடனும் சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், களுத்துறை மாவட்ட குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

மோட்டார் சைக்கிள் திருட்டு: ‘பொம்புவல சுத்தா’ கைது பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 30 வயதுடைய நபர் ஒருவர் களுத்துறை மாவட்ட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.‘பொம்புவல சுத்தா’ என அழைக்கப்படும் குறித்த சந்தேகநபர், களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொடை சந்திப்பு பகுதியில் கடை ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்போது, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.இதனையடுத்து, களுத்துறை மாவட்ட குற்றப் பிரிவின் பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில், பொம்புவல பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், மோட்டார் சைக்கிளின் பதிவு இலக்கத்தை மாற்றும் நோக்கில் அதன் இலக்கத் தகட்டின் மீது ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், இங்கிரிய, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ள பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடனும் சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், களுத்துறை மாவட்ட குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement