• Aug 03 2026

ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மற்றுமொரு கொள்கலன்!

Chithra / Aug 3rd 2026, 12:26 pm
image


ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (03) காலை கொள்கலன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 


​குறித்த கொள்கலன் வெள்ளை நிறமுடைய சுமார் 40 அடி நீளமான கொள்கலன் என ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


ரத்கம பொலிஸாரின் தகவலைத் தொடர்ந்து, தெற்கு மாகாண கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் அக்கொள்கலனைப் பார்வையிட்டனர்.பின்னர், கடற்கரையில் சிதறிக் கிடந்த ‘ரெஜிஃபோர்ம்’ (regiform) துண்டுகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை அவர்கள் அகற்றினர்.


​இது கப்பலொன்றிலிருந்து கடலில் விழுந்த கொள்கலனாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். 


​இதனிடையே, நேற்று (02) இந்துருவ பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றின் பின்புறக் கடற்கரையில் வெள்ளை நிறக் கொள்கலனொன்று கரை ஒதுங்கியிருந்தது. நேற்று முற்பகல் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள இக்கொள்கலன், நேற்றுமுன்தினம் கொழும்புக்கு அண்மித்த கடற்பகுதியில் கப்பலொன்றிலிருந்து கடலில் விழுந்த வெற்றுக் கொள்கலன் என தெரிவிக்கப்படுகின்றது.


இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மற்றுமொரு கொள்கலன் ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (03) காலை கொள்கலன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. ​குறித்த கொள்கலன் வெள்ளை நிறமுடைய சுமார் 40 அடி நீளமான கொள்கலன் என ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரத்கம பொலிஸாரின் தகவலைத் தொடர்ந்து, தெற்கு மாகாண கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் அக்கொள்கலனைப் பார்வையிட்டனர்.பின்னர், கடற்கரையில் சிதறிக் கிடந்த ‘ரெஜிஃபோர்ம்’ (regiform) துண்டுகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை அவர்கள் அகற்றினர்.​இது கப்பலொன்றிலிருந்து கடலில் விழுந்த கொள்கலனாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். ​இதனிடையே, நேற்று (02) இந்துருவ பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றின் பின்புறக் கடற்கரையில் வெள்ளை நிறக் கொள்கலனொன்று கரை ஒதுங்கியிருந்தது. நேற்று முற்பகல் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள இக்கொள்கலன், நேற்றுமுன்தினம் கொழும்புக்கு அண்மித்த கடற்பகுதியில் கப்பலொன்றிலிருந்து கடலில் விழுந்த வெற்றுக் கொள்கலன் என தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement