• May 02 2026

"ஈரானை நம்ப முடியாது " - அமைதித் திட்டத்தை அதிரடியாகத் தூக்கி எறிந்த டிரம்ப்!

Ziya / May 2nd 2026, 11:55 am
image

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்க பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது. 


ஈரானின் புதிய அமைதி முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக நிராகரித்துள்ளார்.


சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்காக ஈரான் காட்டியுள்ள சில விட்டுக்கொடுப்புகள் குறித்து டிரம்ப் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்


"ஈரான் சில முன்னேற்றங்களைக் காட்டியுள்ள போதிலும், அவர்கள் ஒருபோதும் அமைதி இலக்கை அடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை," என டிரம்ப் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் ஊடாக ஈரான் அனுப்பிய புதிய ரகசியத் திட்டத்தை டிரம்ப் ஏற்க மறுத்துள்ளதால், வளைகுடாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.


ஈரான் திட்டத்தை நிராகரித்த அதே வேளையில், மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தானைப் பற்றி டிரம்ப் வியக்கத்தக்க கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.


"பாகிஸ்தான் மீதும், அதன் தலைவர்கள் மீதும் நான் மிகுந்த மதிப்புக் கொண்டுள்ளேன்," எனக் கூறியுள்ள டிரம்ப், அந்நாட்டில் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த சமிக்ஞையை வெளியிட்டுள்ளார்.


ஈரானைத் தனிமைப்படுத்தி, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளைத் தனது பக்கம் இழுக்கும் டிரம்பின் ராஜதந்திர நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது.


பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவிற்கு ஈரான் அனுப்பிய அந்த 'புதிய முன்மொழிவு' திட்டத்தில் என்ன இருக்கிறது என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை


ஈரானிய ஊடகங்கள் இந்தத் திட்டத்தை உறுதி செய்துள்ள போதிலும், அணுசக்தி அல்லது ஹோர்முஸ் ஜலசந்தி குறித்த எந்தவொரு முக்கியச் சலுகையையும் டிரம்ப் நிர்வாகம் இன்னும் போதுமானதாகக் கருதவில்லை.

"ஈரானை நம்ப முடியாது " - அமைதித் திட்டத்தை அதிரடியாகத் தூக்கி எறிந்த டிரம்ப் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்க பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது. ஈரானின் புதிய அமைதி முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக நிராகரித்துள்ளார்.சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்காக ஈரான் காட்டியுள்ள சில விட்டுக்கொடுப்புகள் குறித்து டிரம்ப் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்"ஈரான் சில முன்னேற்றங்களைக் காட்டியுள்ள போதிலும், அவர்கள் ஒருபோதும் அமைதி இலக்கை அடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை," என டிரம்ப் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் ஊடாக ஈரான் அனுப்பிய புதிய ரகசியத் திட்டத்தை டிரம்ப் ஏற்க மறுத்துள்ளதால், வளைகுடாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.ஈரான் திட்டத்தை நிராகரித்த அதே வேளையில், மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தானைப் பற்றி டிரம்ப் வியக்கத்தக்க கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்."பாகிஸ்தான் மீதும், அதன் தலைவர்கள் மீதும் நான் மிகுந்த மதிப்புக் கொண்டுள்ளேன்," எனக் கூறியுள்ள டிரம்ப், அந்நாட்டில் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த சமிக்ஞையை வெளியிட்டுள்ளார்.ஈரானைத் தனிமைப்படுத்தி, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளைத் தனது பக்கம் இழுக்கும் டிரம்பின் ராஜதந்திர நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது.பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவிற்கு ஈரான் அனுப்பிய அந்த 'புதிய முன்மொழிவு' திட்டத்தில் என்ன இருக்கிறது என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லைஈரானிய ஊடகங்கள் இந்தத் திட்டத்தை உறுதி செய்துள்ள போதிலும், அணுசக்தி அல்லது ஹோர்முஸ் ஜலசந்தி குறித்த எந்தவொரு முக்கியச் சலுகையையும் டிரம்ப் நிர்வாகம் இன்னும் போதுமானதாகக் கருதவில்லை.

Advertisement

Advertisement

Advertisement