இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் டெங்கு நோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெளிநாட்டு மனிதநேய, பேரிடர் உதவித் திட்டத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, நுளம்புகள் பெருக்கம் அடையும் இடங்களை அழித்தல், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் முன்னறிவிப்பு அடிப்படையிலான தடுப்பு உத்திகள் உள்ளிட்ட இலங்கையின் பரந்த டெங்கு ஒழிப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளது.
இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு; ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் டெங்கு நோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெளிநாட்டு மனிதநேய, பேரிடர் உதவித் திட்டத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, நுளம்புகள் பெருக்கம் அடையும் இடங்களை அழித்தல், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் முன்னறிவிப்பு அடிப்படையிலான தடுப்பு உத்திகள் உள்ளிட்ட இலங்கையின் பரந்த டெங்கு ஒழிப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளது.