தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இரண்டாம் வருட இளைஞர் மற்றும் அபிவிருத்தி பாடநெறி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட “சமூக ஊடக அடிமைத்தனம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு” நீர்கொழும்பு, கொச்சிக்கடை, தொப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப்பணி பாடசாலையின் பணிப்பாளர் வி.ஜெயரூபன் பிரதம அதிதியாகவும், பாடசாலையின் அதிபர் எம்.எம்.எம்.இர்சாத் அதிதியாகவும் செல்வி ரமீசா க்கான், மற்றும் கலிந்து ரத்நாயக்க, ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த செயலமர்வில் வை.எம்நிம்சாத் வளவாளராக கலந்து கொண்டு அடிமைத்தனத்தினால் மாணவர்களின் கல்வி, மனநலம் மற்றும் சமூக வாழ்வில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பான விடயங்களை மாணவர்களிற்கு தெளிவுபடுத்தியிருந்தார்.
மேலும் குறித்த நிகழ்வானது மாணவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான பொறுப்புணர்வை வளர்த்ததுடன், அதன் எதிர்மறை விளைவுகள் குறித்த தெளிவான புரிதலையும் ஏற்படுத்திய ஒரு பயனுள்ள செயலமர்வாக அமைந்தது.
சமூக ஊடக அடிமைத்தனம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இரண்டாம் வருட இளைஞர் மற்றும் அபிவிருத்தி பாடநெறி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட “சமூக ஊடக அடிமைத்தனம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு” நீர்கொழும்பு, கொச்சிக்கடை, தொப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப்பணி பாடசாலையின் பணிப்பாளர் வி.ஜெயரூபன் பிரதம அதிதியாகவும், பாடசாலையின் அதிபர் எம்.எம்.எம்.இர்சாத் அதிதியாகவும் செல்வி ரமீசா க்கான், மற்றும் கலிந்து ரத்நாயக்க, ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த செயலமர்வில் வை.எம்நிம்சாத் வளவாளராக கலந்து கொண்டு அடிமைத்தனத்தினால் மாணவர்களின் கல்வி, மனநலம் மற்றும் சமூக வாழ்வில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பான விடயங்களை மாணவர்களிற்கு தெளிவுபடுத்தியிருந்தார்.மேலும் குறித்த நிகழ்வானது மாணவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான பொறுப்புணர்வை வளர்த்ததுடன், அதன் எதிர்மறை விளைவுகள் குறித்த தெளிவான புரிதலையும் ஏற்படுத்திய ஒரு பயனுள்ள செயலமர்வாக அமைந்தது.