ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் வயல்வெளி ஒன்றுக்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (15) காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் மொரன்துடுவ, மஹாலந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இராணுவ சிப்பாயின் சடலம் ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் வயல்வெளி ஒன்றுக்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.நேற்று (15) காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.உயிரிழந்தவர் மொரன்துடுவ, மஹாலந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.