கம்பஹா - வேயங்கொடை - பத்தலகெதர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப் பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (29) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீக்காயங்களுக்குள்ளான முதியவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மொரட்டுவத்த, பத்தலகெதர பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப் பரவல் ஏற்பட்டபோது முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப் பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வேயங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு; தனியாக இருந்த முதியவர் பரிதாபமாக பலி கம்பஹா - வேயங்கொடை - பத்தலகெதர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப் பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று வியாழக்கிழமை (29) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீக்காயங்களுக்குள்ளான முதியவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் மொரட்டுவத்த, பத்தலகெதர பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தீப் பரவல் ஏற்பட்டபோது முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீப் பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வேயங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.