• Apr 18 2026

பொதுத் தேர்தலில் ஐக்கிய காங்கிரஸ் கட்சி புத்தளத்தில் தனித்துப் போட்டி...!samugammedia

Ziya / Dec 20th 2023, 1:19 pm
image

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மற்றும் புத்தளம் தொகுதி அமைப்பாளர் பாரூக் முஹம்மது ராபி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கல்முனையில் நடைபெற்றது.


இக்கலந்துரையாடலில் புத்தளம் தொகுதியின் அரசியல் கள நிலவரங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.


குறிப்பாக அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய காங்கிரஸ் கட்சி புத்தளம் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட வேண்டிய அவசியம் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.


மேலும், புத்தளம் தொகுதியில் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களின் ஒத்துழைப்போடு பொதுத் தேர்தலில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடாக புத்தளத்திற்கான பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கான திட்டங்களை வகுத்து செயலாற்றுமாறு கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

பொதுத் தேர்தலில் ஐக்கிய காங்கிரஸ் கட்சி புத்தளத்தில் தனித்துப் போட்டி.samugammedia ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மற்றும் புத்தளம் தொகுதி அமைப்பாளர் பாரூக் முஹம்மது ராபி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கல்முனையில் நடைபெற்றது.இக்கலந்துரையாடலில் புத்தளம் தொகுதியின் அரசியல் கள நிலவரங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.குறிப்பாக அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய காங்கிரஸ் கட்சி புத்தளம் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட வேண்டிய அவசியம் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.மேலும், புத்தளம் தொகுதியில் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களின் ஒத்துழைப்போடு பொதுத் தேர்தலில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடாக புத்தளத்திற்கான பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கான திட்டங்களை வகுத்து செயலாற்றுமாறு கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

Advertisement

Advertisement

Advertisement