சஹஸ்புர - ஹல்கஹவத்த பகுதியில் இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதல் கொலைச் சம்பவம் தொடர்பாக இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 3ஆம் திகதி அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், கொலைக்கான காரணம் மற்றும் அதில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நோக்கில் சஹஸ்புர பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
அந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக, பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மாதம்பிட்டிய பகுதியில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொலைச் சம்பவத்தின் பின்னணி மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்து சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சஹஸ்புர கொலை வழக்கில் திருப்பம்: இரு சந்தேகநபர்கள் கைது சஹஸ்புர - ஹல்கஹவத்த பகுதியில் இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதல் கொலைச் சம்பவம் தொடர்பாக இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த ஜூன் 3ஆம் திகதி அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், கொலைக்கான காரணம் மற்றும் அதில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நோக்கில் சஹஸ்புர பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.அந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக, பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மாதம்பிட்டிய பகுதியில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கொலைச் சம்பவத்தின் பின்னணி மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்து சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.