சுனாமி ஆழிப்பேரலையின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல், உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.
சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்காக உடுத்துறையில் அமைக்கப்பட்ட பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் ஆரம்பமானது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் , வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், ஆகியோர் கலந்துகொண்டு பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
உடுத்துறை நினைவாலயத்தில் ஆழிப்பேரலை நினைவேந்தல் சுனாமி ஆழிப்பேரலையின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல், உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது. சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்காக உடுத்துறையில் அமைக்கப்பட்ட பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் ஆரம்பமானது.வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் , வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், ஆகியோர் கலந்துகொண்டு பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.