• May 22 2026

இவ்வருடத்தில் 128 யானைகள் உயிரிழப்பு - 35 மனித உயிர்களும் யானைகளால் பலி

Chithra / May 21st 2026, 11:02 am
image

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


அவற்றில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் 20 காட்டு யானைகளும், மின்சாரம் தாக்கியதால் 15 யானைகளும், ஹக்க பட்டாஸ் உட்கொண்டதால் 10 யானைகளும், விவசாயக் கிணறுகளுக்குள் விழுந்ததால் 05 யானைகளும் உயிரிழந்துள்ளன.


இவற்றுக்கு மேலதிகமாக, விஷம் உட்கொண்டமை, ரயில்களில் மோதியமை மற்றும் நீரில் மூழ்கியமை போன்ற விபத்துக்களினாலும் காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கிழக்கு பிராந்தியத்திலேயே அதிகளவிலான காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் வனஜீவராசி பிராந்தியங்களிலும் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளன.


இது தவிர, காட்டு யானைகளின் தாக்குதல்களினால் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 35 மனித மரணங்களும் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


இவ்வருடத்தில் 128 யானைகள் உயிரிழப்பு - 35 மனித உயிர்களும் யானைகளால் பலி இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அவற்றில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் 20 காட்டு யானைகளும், மின்சாரம் தாக்கியதால் 15 யானைகளும், ஹக்க பட்டாஸ் உட்கொண்டதால் 10 யானைகளும், விவசாயக் கிணறுகளுக்குள் விழுந்ததால் 05 யானைகளும் உயிரிழந்துள்ளன.இவற்றுக்கு மேலதிகமாக, விஷம் உட்கொண்டமை, ரயில்களில் மோதியமை மற்றும் நீரில் மூழ்கியமை போன்ற விபத்துக்களினாலும் காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கிழக்கு பிராந்தியத்திலேயே அதிகளவிலான காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் வனஜீவராசி பிராந்தியங்களிலும் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளன.இது தவிர, காட்டு யானைகளின் தாக்குதல்களினால் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 35 மனித மரணங்களும் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement