வாகனச் சாரதிப் பயிற்சி நிலையங்களில் (Driving Schools) மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளர்கள், கட்டாயமாக முறையான பயிற்சி உரிமத்தைக் (Instructor License) கொண்டிருக்க வேண்டும் என இலங்கை பொலிஸ் வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறான அங்கீகாரம் இன்றி பயிற்சிகளை நடத்தும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர ஊடகங்களுக்கு விபரங்களை வெளியிட்டுள்ளார்.
பல சாரதிப் பயிற்சி நிலையங்கள் முறையான நிறுவன உரிமங்களைக் கொண்டிருந்தாலும், நடைமுறையில் போதிய தகுதிச் சான்றிதழ் இல்லாத நபர்களே பெரும்பாலும் மாணவர்களுக்குப் பயிற்சிகளை நடத்துவதாகப் பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
தகுதியற்றவர்களிடம் முறையற்ற பயிற்சிகளைப் பெற்று, பின்னர் சாரதி உரிமம் பெறும் இளைஞர்களே அதிகளவில் வீதி விபத்துகளில் சிக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இளைஞர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் குறைபாடுகளைக் கொண்டிருப்பதும், வீதி அடையாளங்கள் மற்றும் விதிகளைப் பின்பற்றத் தவறுவதும் விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
சாரதிப் பயிற்சி உரிமம் வழங்கும் முறைமை தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் (RMV) தற்போது விசேட கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம், சான்றளிக்கப்பட்ட தகுதியான பயிற்றுவிப்பாளர்கள் மட்டுமே மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதை உறுதி செய்ய முழுமையான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர மேலும் தெரிவித்தார்.
சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு முறையான உரிமம் கட்டாயம்: இலங்கை பொலிஸ் உத்தரவு வாகனச் சாரதிப் பயிற்சி நிலையங்களில் (Driving Schools) மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளர்கள், கட்டாயமாக முறையான பயிற்சி உரிமத்தைக் (Instructor License) கொண்டிருக்க வேண்டும் என இலங்கை பொலிஸ் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறான அங்கீகாரம் இன்றி பயிற்சிகளை நடத்தும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர ஊடகங்களுக்கு விபரங்களை வெளியிட்டுள்ளார்.பல சாரதிப் பயிற்சி நிலையங்கள் முறையான நிறுவன உரிமங்களைக் கொண்டிருந்தாலும், நடைமுறையில் போதிய தகுதிச் சான்றிதழ் இல்லாத நபர்களே பெரும்பாலும் மாணவர்களுக்குப் பயிற்சிகளை நடத்துவதாகப் பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.தகுதியற்றவர்களிடம் முறையற்ற பயிற்சிகளைப் பெற்று, பின்னர் சாரதி உரிமம் பெறும் இளைஞர்களே அதிகளவில் வீதி விபத்துகளில் சிக்குவதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், இளைஞர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் குறைபாடுகளைக் கொண்டிருப்பதும், வீதி அடையாளங்கள் மற்றும் விதிகளைப் பின்பற்றத் தவறுவதும் விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.சாரதிப் பயிற்சி உரிமம் வழங்கும் முறைமை தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் (RMV) தற்போது விசேட கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம், சான்றளிக்கப்பட்ட தகுதியான பயிற்றுவிப்பாளர்கள் மட்டுமே மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதை உறுதி செய்ய முழுமையான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர மேலும் தெரிவித்தார்.