• May 21 2026

புதிய மின்சார நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணி ஆரம்பம்!

Chithra / Sep 22nd 2025, 4:23 pm
image


இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நான்கு முழு அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை மின்சார சபையின் சில ஊழியர்கள் மேற்கூறியவாறு நிறுவப்படவுள்ள நிறுவனங்களில் சேர விருப்பம் தெரிவித்து கடிதங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்த விருப்பக் கடிதங்கள் இன்று (22) காலை இலங்கை மின்சார சபை தலைமையகத்தில் இலங்கை மின்சார சபையின் தலைவர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலவிடம் கையளிக்கப்பட்டன.

மேற்படி ஊழியர்கள், 2025 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்த) சட்டத்தின்படி நிறுவப்பட்ட முழுமையாக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களான தேசிய அமைப்பு கட்டுப்பாட்டு (தனியார்) நிறுவனம், தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவைகள் வழங்கல் (தனியார்) நிறுவனம், இலங்கை மின்சார விநியோக நிறுவனம் (தனியார்) நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார உற்பத்தி நிறுவனம் (தனியார்) நிறுவனம் ஆகிய 04 நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய மின்சார நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணி ஆரம்பம் இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நான்கு முழு அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கை மின்சார சபையின் சில ஊழியர்கள் மேற்கூறியவாறு நிறுவப்படவுள்ள நிறுவனங்களில் சேர விருப்பம் தெரிவித்து கடிதங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தனர்.இந்த விருப்பக் கடிதங்கள் இன்று (22) காலை இலங்கை மின்சார சபை தலைமையகத்தில் இலங்கை மின்சார சபையின் தலைவர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலவிடம் கையளிக்கப்பட்டன.மேற்படி ஊழியர்கள், 2025 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்த) சட்டத்தின்படி நிறுவப்பட்ட முழுமையாக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களான தேசிய அமைப்பு கட்டுப்பாட்டு (தனியார்) நிறுவனம், தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவைகள் வழங்கல் (தனியார்) நிறுவனம், இலங்கை மின்சார விநியோக நிறுவனம் (தனியார்) நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார உற்பத்தி நிறுவனம் (தனியார்) நிறுவனம் ஆகிய 04 நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement