• Jul 07 2026

வாடகை வீட்டில் சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

Chithra / Jul 7th 2026, 4:01 pm
image


பாணந்துறை வடக்கு, கல்கனுவ வீதியில் அமைந்துள்ள வாடகை வீடு ஒன்றில் 26 வயதுடைய இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர், தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப் பிரிவில் கல்வி பயின்று வந்த நதுனி சஹஸ்ரீ கூரே என்ற 26 வயதுடைய  யுவதியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.


பொலிஸாரின் தகவலின்படி, அவர் குறித்த வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்ததுடன், தனது சட்டக் கல்வியைத் தொடர்ந்தபடியே சட்டத்தரணிகளின் பணிகளுக்கும் உதவி செய்து வந்துள்ளார்.


அவரது உயிரிழப்பு தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலா ஏற்பட்டது என்பது இதுவரை உறுதியாகவில்லை.


சம்பவம் தொடர்பில் அனைத்து கோணங்களிலும் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வாடகை வீட்டில் சட்டக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு பாணந்துறை வடக்கு, கல்கனுவ வீதியில் அமைந்துள்ள வாடகை வீடு ஒன்றில் 26 வயதுடைய இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர், தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப் பிரிவில் கல்வி பயின்று வந்த நதுனி சஹஸ்ரீ கூரே என்ற 26 வயதுடைய  யுவதியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.பொலிஸாரின் தகவலின்படி, அவர் குறித்த வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்ததுடன், தனது சட்டக் கல்வியைத் தொடர்ந்தபடியே சட்டத்தரணிகளின் பணிகளுக்கும் உதவி செய்து வந்துள்ளார்.அவரது உயிரிழப்பு தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலா ஏற்பட்டது என்பது இதுவரை உறுதியாகவில்லை.சம்பவம் தொடர்பில் அனைத்து கோணங்களிலும் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement