• Apr 19 2026

சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு தடை விதித்த அடுத்த நாடு!

Ziya / Jan 27th 2026, 2:04 pm
image

சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை இணையவழி மோசடிகள் மற்றும் தேவையற்ற அபாயங்களிலிருந்து பாதுகாக்க, எகிப்து அரசு சமூக வலைத்தளப் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை உருவாக்கவுள்ளது.

 

கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின்படி, எகிப்தில் உள்ள 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. 

 

இவர்கள் மிக எளிதாக இணையவழி மோசடிகள் மற்றும் தேவையற்ற இணைய அபாயங்களில் சிக்குவது தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

சிறுவர்கள் போதிய முதிர்ச்சியை அடையும் வரை அவர்களை சமூக வலைத்தளப் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பத்தாஹ் அல் சிசி வலியுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பான சட்டக் கட்டமைப்புகளை உருவாக்குமாறு அவர் அண்மையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

 

இதையடுத்து, எகிப்திய அரசு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம், அந்நாட்டு நாடாளுமன்றம், சிறுவர் நல அமைப்புடன் இணைந்து இது குறித்து ஆய்வு மேற் கொண்டு விரைவில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

 

ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கும், பிரித்தானியாவில் 15 வயதுக்குட்பட்டோருக்கும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

 

இந்த நாடுகளின் சட்டதிட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டே எகிப்திலும் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு தடை விதித்த அடுத்த நாடு சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை இணையவழி மோசடிகள் மற்றும் தேவையற்ற அபாயங்களிலிருந்து பாதுகாக்க, எகிப்து அரசு சமூக வலைத்தளப் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை உருவாக்கவுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின்படி, எகிப்தில் உள்ள 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.  இவர்கள் மிக எளிதாக இணையவழி மோசடிகள் மற்றும் தேவையற்ற இணைய அபாயங்களில் சிக்குவது தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.  சிறுவர்கள் போதிய முதிர்ச்சியை அடையும் வரை அவர்களை சமூக வலைத்தளப் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பத்தாஹ் அல் சிசி வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பான சட்டக் கட்டமைப்புகளை உருவாக்குமாறு அவர் அண்மையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  இதையடுத்து, எகிப்திய அரசு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம், அந்நாட்டு நாடாளுமன்றம், சிறுவர் நல அமைப்புடன் இணைந்து இது குறித்து ஆய்வு மேற் கொண்டு விரைவில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கும், பிரித்தானியாவில் 15 வயதுக்குட்பட்டோருக்கும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இந்த நாடுகளின் சட்டதிட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டே எகிப்திலும் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement