இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான உயர்மட்டக் குழுவினரால் தமிழக அமைச்சருக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்விஜயத்தின் போது, பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான உயர்கல்வித் துறைசார் நல்லுறவுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், வெளிநாட்டு விவகாரப் பணிப்பாளரும் கல்முனை முன்னாள் முதல்வருமான சிராஷ் மீராசாஹிப், அம்பாறை மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன், தமிழகத்திலிருந்து அமைச்சர் ஷாஜஹானுடன் வருகை தந்த சிறப்புத் தூதுக்குழுவினரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான் உத்தியோகபூர்வ விஜயம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான உயர்மட்டக் குழுவினரால் தமிழக அமைச்சருக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இவ்விஜயத்தின் போது, பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான உயர்கல்வித் துறைசார் நல்லுறவுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், வெளிநாட்டு விவகாரப் பணிப்பாளரும் கல்முனை முன்னாள் முதல்வருமான சிராஷ் மீராசாஹிப், அம்பாறை மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.அத்துடன், தமிழகத்திலிருந்து அமைச்சர் ஷாஜஹானுடன் வருகை தந்த சிறப்புத் தூதுக்குழுவினரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.