• Aug 11 2026

கைது செய்யப்பட்ட சாகர காரியவசம் உடனே விடுதலை?

Aathira / Aug 10th 2026, 8:10 pm
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், இன்று (10) காலை மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட நிலையில், கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சாகர காரியவசம் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் தொடர்பாக பொது வெளியில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்குமாறு சாகர காரியவசம் இன்று முற்பகல் மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, சாகர காரியவசம் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், அவரை பிணையில் செல்ல அனுமதித்ததுடன், வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாகர காரியவசம் உடனே விடுதலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், இன்று (10) காலை மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட நிலையில், கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.அத்துடன், சாகர காரியவசம் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.பொலிஸ் மா அதிபர் தொடர்பாக பொது வெளியில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்குமாறு சாகர காரியவசம் இன்று முற்பகல் மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.அங்கு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து, சாகர காரியவசம் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், அவரை பிணையில் செல்ல அனுமதித்ததுடன், வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement