திருகோணமலை மாவட்ட ,தம்பலாகாமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (31) பிரதேச செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற் சங்கம் இதனை நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதற்கு வலுசேர்க்கும் முகமாக தம்பலாகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவை பிரமாணக் குறிப்பு, MN5 சம்பள அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கு,
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பை சீர்திருத்தும் செயற்பாட்டை விரைவாக்கு,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை நிறுவு 2027வரவு செலவு திட்டத்தில் ரூபா 25000 இடைக்கால கொடுப்பனவு வழங்கு,
ஐந்து வருடங்களில் தரப் பதவி உயர்வு வழங்கு,பெறும் சம்பளம் ஒரு மாதத்திற்கே போதாது எரிபொருள் கொடுப்பனவு எம்பிக்களுக்கு மட்டுமா போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இதன் போது நடை பவணியாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சென்றனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளை முன்வைத்து தம்பலாகாமத்தில் கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலை மாவட்ட ,தம்பலாகாமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (31) பிரதேச செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற் சங்கம் இதனை நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதற்கு வலுசேர்க்கும் முகமாக தம்பலாகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவை பிரமாணக் குறிப்பு, MN5 சம்பள அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கு,அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பை சீர்திருத்தும் செயற்பாட்டை விரைவாக்கு,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை நிறுவு 2027வரவு செலவு திட்டத்தில் ரூபா 25000 இடைக்கால கொடுப்பனவு வழங்கு,ஐந்து வருடங்களில் தரப் பதவி உயர்வு வழங்கு,பெறும் சம்பளம் ஒரு மாதத்திற்கே போதாது எரிபொருள் கொடுப்பனவு எம்பிக்களுக்கு மட்டுமா போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இதன் போது நடை பவணியாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சென்றனர்.