வடக்கு மாகாணத்தில் கடமை நேரத்தில் ஒழுக்க விதிகளை மீறி, இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) நடத்துனருடன் முரண்பட்டுத் தரக்குறைவாக நடந்துகொண்ட தனியார் பேருந்து நடத்துனருக்கு மறுஅறிவித்தல் வரை பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, கடமையிலிருந்த குறித்த தனியார் பேருந்து நடத்துனர், இ.போ.ச. பேருந்து நடத்துனரை நோக்கித் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி ஆதாரங்கள் அதிகார சபையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்:
'கிடைக்கப்பெற்ற காணொலி ஆதாரங்களை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட நபர் ஒரு பேருந்து நடத்துனருக்குரிய அடிப்படை ஒழுக்கத்தைப் பேணத் தவறியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறித்த நபர் வடக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு பயணிகள் பேருந்திலும் நடத்துனராகப் பணியாற்றுவதற்கு மறுஅறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளுடனும், ஏனைய போக்குவரத்துச் சேவையாளர்களுடனும் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறான ஒழுக்க மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகப் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் மற்றும் பணித்தடைகள் விதிக்கப்படும்' என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அதேவேளை, பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் வேண்டுமென்றே ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ அல்லது முறைகேடுகள் இடம்பெற்றாலோ, பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபையின் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என அதிகார சபை மீண்டும் வலியுறுத்துகின்றது.
தனியார் பேருந்து நடத்துனருக்கு மறுஅறிவித்தல் வரை பணித்தடை வடக்கு மாகாணத்தில் கடமை நேரத்தில் ஒழுக்க விதிகளை மீறி, இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) நடத்துனருடன் முரண்பட்டுத் தரக்குறைவாக நடந்துகொண்ட தனியார் பேருந்து நடத்துனருக்கு மறுஅறிவித்தல் வரை பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அண்மையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, கடமையிலிருந்த குறித்த தனியார் பேருந்து நடத்துனர், இ.போ.ச. பேருந்து நடத்துனரை நோக்கித் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி ஆதாரங்கள் அதிகார சபையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்:'கிடைக்கப்பெற்ற காணொலி ஆதாரங்களை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட நபர் ஒரு பேருந்து நடத்துனருக்குரிய அடிப்படை ஒழுக்கத்தைப் பேணத் தவறியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறித்த நபர் வடக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு பயணிகள் பேருந்திலும் நடத்துனராகப் பணியாற்றுவதற்கு மறுஅறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளுடனும், ஏனைய போக்குவரத்துச் சேவையாளர்களுடனும் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறான ஒழுக்க மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகப் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் மற்றும் பணித்தடைகள் விதிக்கப்படும்' என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.அதேவேளை, பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் வேண்டுமென்றே ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ அல்லது முறைகேடுகள் இடம்பெற்றாலோ, பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபையின் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என அதிகார சபை மீண்டும் வலியுறுத்துகின்றது.