ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய டிட்வா புயலின் தாக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து மனதை ரணமாக்கியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி வீடுகளின்றி , தங்குமிடமின்றி இருந்த மக்கள் நாட்டின் நாலாபக்கங்களிலும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான உணவுகள், சிறு தேவைகள் என பல பக்கங்களிலிருந்தும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.
அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைத் தவிர வேறு எதையும் எடுக்காமல் தங்குமிடத்திற்குள் நுழைந்தனர்.
பலர் தங்கள் வீடுகள், நினைவுகள் மற்றும் தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் இழந்திருந்தனர்.
இவ்வாறு பல நாட்களாக சிக்கித் தவித்த குடும்பங்கள் தங்க வைக்கப்பட்ட முகாமொன்றில் ஒரு எளிய இசை மாலை ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த இசை நிகழ்ச்சியில் தம்மை மறந்து தமக்கு நேர்ந்த துயரத்தை மறந்து அவர்கள் மகிழ்ச்சியாக ஆடிப்பாடியுள்ளனர்.
சில மணிநேரங்களுக்கு வெள்ள நீர், காணாமல் போன ஆவணங்கள் அல்லது மீண்டும் கட்டமைக்கக் காத்திருக்கும் உடைந்த சுவர்கள் பற்றி அவர்களில் சிந்தனையில் வரவில்லை.
மனவேதனையின் நடுவில் அவர்கள் கைதட்டி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஆனால் கொண்டாட்டத்தில் அல்ல, வலிமையில்.
உறவுகள், உடமைகள், சொத்துக்கள் என அனைத்தையும் இழந்து தவித்த மக்கள் சிலமணிநேரம் அனைத்தையும் மறந்து ஆடிப்பாடி மகிழ்ந்துள்ள காட்சி மனதை நெருடியுள்ளது.
இழப்பின் வலியை மறக்க ஆடிப்பாடிய மக்கள் - இடைத்தங்கல் முகாமில் குதூகலித்த காட்சிகள் வைரல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய டிட்வா புயலின் தாக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து மனதை ரணமாக்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி வீடுகளின்றி , தங்குமிடமின்றி இருந்த மக்கள் நாட்டின் நாலாபக்கங்களிலும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவுகள், சிறு தேவைகள் என பல பக்கங்களிலிருந்தும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது. அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைத் தவிர வேறு எதையும் எடுக்காமல் தங்குமிடத்திற்குள் நுழைந்தனர். பலர் தங்கள் வீடுகள், நினைவுகள் மற்றும் தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் இழந்திருந்தனர்.இவ்வாறு பல நாட்களாக சிக்கித் தவித்த குடும்பங்கள் தங்க வைக்கப்பட்ட முகாமொன்றில் ஒரு எளிய இசை மாலை ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த இசை நிகழ்ச்சியில் தம்மை மறந்து தமக்கு நேர்ந்த துயரத்தை மறந்து அவர்கள் மகிழ்ச்சியாக ஆடிப்பாடியுள்ளனர். சில மணிநேரங்களுக்கு வெள்ள நீர், காணாமல் போன ஆவணங்கள் அல்லது மீண்டும் கட்டமைக்கக் காத்திருக்கும் உடைந்த சுவர்கள் பற்றி அவர்களில் சிந்தனையில் வரவில்லை. மனவேதனையின் நடுவில் அவர்கள் கைதட்டி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஆனால் கொண்டாட்டத்தில் அல்ல, வலிமையில். உறவுகள், உடமைகள், சொத்துக்கள் என அனைத்தையும் இழந்து தவித்த மக்கள் சிலமணிநேரம் அனைத்தையும் மறந்து ஆடிப்பாடி மகிழ்ந்துள்ள காட்சி மனதை நெருடியுள்ளது.