• Aug 04 2026

களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

Chithra / Aug 3rd 2026, 1:17 pm
image


நிலவும் சீரற்ற வானிலை காரணமாகக் களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வௌ்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 


​இந்த அறிவித்தல் அடுத்த 48 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த அறிவித்தல் 5 ஆம் திகதி காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


​இந்நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 


​ இதனிடையே, அப்பகுதிகள் ஊடான உப வீதிகளில் பயணிக்கும் சாரதிகளும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை நிலவும் சீரற்ற வானிலை காரணமாகக் களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வௌ்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ​இந்த அறிவித்தல் அடுத்த 48 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த அறிவித்தல் 5 ஆம் திகதி காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ​இந்நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. ​ இதனிடையே, அப்பகுதிகள் ஊடான உப வீதிகளில் பயணிக்கும் சாரதிகளும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement