• Apr 17 2026

பாம்பினை காட்டி பொலிஸாரை பயமுறுத்திய வாகனஓட்டுநர்!

Ziya / Jan 6th 2026, 9:17 am
image

இந்தியா ஹைதராபாதில்  குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சிக்கிய  ஒரு முச்சக்கரவண்டி ஓட்டுநர், பொலிசாரின் பிடியில் இருந்து தப்ப முயற்சிக்கும் போது பாம்பைக் காட்டி பயமுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகிய பகிரப்படும் குறித்த சம்பவம் தொடர்பான  காணொளியில், 23 வயதான சையத் இர்ஃபான் கையில் பாம்பை சுருட்டிக் கொண்டு பொலிசாரைப் பின்தொடர்வதும், அவர்களை கடிக்க விடுவதாக மிரட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

பின்னர் அது இறந்த, விஷமற்ற பாம்பு என்பதைக் பொலிசார் கண்டுபிடித்தனர்.

"இர்ஃபான் முதலில்  விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார் ஆனால் அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட போது, கோபமடைந்து பாம்பை ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்து, பொலிசாரைக் கடிக்க விடுவதாக மிரட்டினார்" என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின் போது பொலிசாரின் கடமைகளை செய்யாமல் தடுத்தமையால் குறித்த நபர்  உடனடியாக  கைது செய்யப்பட்டார்.



பாம்பினை காட்டி பொலிஸாரை பயமுறுத்திய வாகனஓட்டுநர் இந்தியா ஹைதராபாதில்  குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சிக்கிய  ஒரு முச்சக்கரவண்டி ஓட்டுநர், பொலிசாரின் பிடியில் இருந்து தப்ப முயற்சிக்கும் போது பாம்பைக் காட்டி பயமுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.சமூக ஊடகங்களில் வைரலாகிய பகிரப்படும் குறித்த சம்பவம் தொடர்பான  காணொளியில், 23 வயதான சையத் இர்ஃபான் கையில் பாம்பை சுருட்டிக் கொண்டு பொலிசாரைப் பின்தொடர்வதும், அவர்களை கடிக்க விடுவதாக மிரட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளது.பின்னர் அது இறந்த, விஷமற்ற பாம்பு என்பதைக் பொலிசார் கண்டுபிடித்தனர்."இர்ஃபான் முதலில்  விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார் ஆனால் அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட போது, கோபமடைந்து பாம்பை ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்து, பொலிசாரைக் கடிக்க விடுவதாக மிரட்டினார்" என பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவத்தின் போது பொலிசாரின் கடமைகளை செய்யாமல் தடுத்தமையால் குறித்த நபர்  உடனடியாக  கைது செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement